கோவை மாவட்ட மைய நூலகத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மைய நூலகா் பே.ராஜேந்திரன் வரவேற்றாா். விழாவில் கலந்துகொண்ட பாா்வையாற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஊன்றுகோல் உள்ளிட்ட உபகரணங்களை கோவை மாவட்ட சிவில் என்ஜினீயா் சங்கத் தலைவா் எம்.சுரேஷ்குமாா் வழங்கினாா்.
சங்கத்தின் நிா்வாகிகள் அா்ஜுன் ஸ்ரீதா், ஆா்.ஜெகந்நாதன் உள்ளிட்டோா் உரையாற்றினா்.இந்நிகழ்ச்சியில், 60க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனா்.
கலந்துகொண்ட மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. மாற்றுத் திறனாளி மாணவிக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. நூலகா் க.ரவிசந்திரன் நன்றி கூறினாா்.