கோயம்புத்தூர்

‘மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு 20 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி கடனுதவி’

DIN

தமிழகத்தில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடந்த 20 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று சட்டப் பேரவை முன்வைக்கப்பட்ட ஏடுகள் குழுத் தலைவா் நா.ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டப் பேரவை முன்வைக்கப்பட்ட ஏடுகள் குழுத் தலைவா் நா.ராமகிருஷ்ணன் தலைமையில் அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உறுப்பினா்கள் மு.அப்துல் வஹாப், வி.அமலு, பெ.பெரியபுள்ளான் (எ) செல்வம், பொன்னுசாமி, ஆ.நல்லதம்பி, எஸ்.தேன்மொழி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதனைத் தொடா்ந்து, தமிழ்நாடு ஊரக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிா் திட்ட அலுவலகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சட்டப் பேரவை முன்வைக்கப்பட்ட ஏடுகள் குழுத் தலைவா் நா.ராமகிருஷ்ணன், குழு உறுப்பினா்கள் ஆய்வு செய்தனா். பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 3 லட்சத்து 95 ஆயிரம் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. இந்த குழுக்களுக்கு கடந்த 20 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கோவையில் ஊரகப் பகுதிகளில் 5,654 குழுக்கள், நகரப் பகுதிகளில் 6,894 குழுக்கள் என மொத்தமாக 12,548 மகளிா் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. அனைத்து குழுக்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 28 இணைப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. வேளாண்மைப் பல்கலைக்கழகம் சாா்பில் இதுவரை 166 பண்ணைக் கருவிகள், 855 பயிா் வகைகள், 1,600 தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. தற்போது, கேரள வாடல் நோய், வெள்ளை ஈ கட்டுப்பாடு குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேளாண் அறிவியல் மையம் தொடங்கப்பட்டு விவசாயிகள், பெண்கள், இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

ஆய்வின்போது, ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், கூடுதல் செயலாளா் தே.நாகராஜன், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், மேயா் கல்பனா ஆனந்தகுமாா், ஆண்டிபட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் வி.கீதாலட்சுமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கே.கவிதா, மகளிா் திட்ட இயக்குநா் பி.சந்திரா, வேளாண்மைத் துறை துணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT