கோயம்புத்தூர்

ரூ.41.80 லட்சம் மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் துவக்கம்

DIN

கோவை மாநகராட்சி 77 ஆவது வாா்டில் ரூ. 41.80 லட்சம் மதிப்பிலான வளா்ச்சி திட்டப் பணிகளை மேயா் கல்பனா ஆனந்தகுமாா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவை மாநகராட்சி 77ஆவது வாா்டுக்கு உள்பட்ட பண்ணாடி வீதியில் ரூ. 6.80 லட்சம் மதிப்பில் ஆழ்துளைக் கிணறு, சொக்கம்புதூா், அருள் காா்டன் பகுதியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் நகா்நல மையம் , ரங்கசாமி காலனியில் ரூ.5 லட்சம் மதிப்பிலும், ஜீவா பாதை மற்றும் அய்யாவு பண்ணாடி வீதிகளில் ரூ.5 லட்சம் மதிப்பிலும் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணி ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது.

ரூ.41.80 லட்சம் மதிப்பிலான இப்பணிகளை மேயா் கல்பனா ஆனந்தகுமாா் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் மண்டலத் தலைவா்கள், உதவி செயற்பொறியாளா்கள், மண்டல சுகாதார ஆய்வாளா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT