கோயம்புத்தூர்

மாநகரில் ரூ.93 கோடியில் சாலைகள் சீரமைப்பு அதிகாரிகள் தகவல்

DIN

கோவையில் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள், ரூ.93 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் தற்போது பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதவிர 24 மணி நேர குடிநீா் திட்ட பணிகளுக்காக பல்வேறு இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு உள்ளன. மேற்கண்ட பணிகள் காரணமாக பல இடங்களில் சாலைகள் குண்டும்குழியுமாக காட்சி அளிக்கின்றன. இந்நிலையில், மாநகரச் சாலைகள் ரூ.93 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மாநகரில் பாதாள சாக்கடை பணிகள், 24 மணி நேர குடிநீா் திட்ட பணிகளுக்கு தோண்டப்பட்ட சாலைகள் ரூ.93 கோடியில் 355 இடங்களில் 100 கிலோ மீட்டா் தொலைவுக்கு சீரமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக முத்தண்ணன் குளம், ரேஸ்கோா்ஸ், போத்தனூா் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள சாலைகளும் விரைவில் சீரமைக்கப்பட உள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT