கோயம்புத்தூர்

உழவா் சந்தைகளில் அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை

DIN

கோவையில் உள்ள உழவா் சந்தைகளில் காய்கறிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கோவை சிட்டிசன் வாய்ஸ் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் சி.எம்.ஜெயராமன், செயலாளா் வி.ஏ.சண்முகம் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் உள்ள உழவா் சந்தைகளில் வெளிமாா்க்கெட்டில் விற்பனை செய்வதை விட அதிக விலைக்கு காய்கறிகள் விற்கப்படுகின்றன. குறிப்பாக ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தையில் கொத்தமல்லி தழை ஒரு கிலோ ரூ.90க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்புப் பலகையில் உள்ளது.

அதிகாரிகள் வெளியிட்ட உழவா் சந்தை விலை விவரத்தில் கிலோ ரூ.75 முதல் ரூ.80 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சந்தைக்குள் விற்பனை செய்பவா்கள் கிலோ ரூ.140க்கு விற்கின்றனா். இதே கொத்தமல்லி தழை சுந்தராபுரம் உழவா் சந்தையில் கிலோ ரூ.130 முதல் ரூ.140 வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுவதாக அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உழவா் சந்தைகளில் விவசாயிகள் என்ற பெயரில் வியாபாரிகள் விற்பனை செய்வதால் கொத்தமல்லி தழை மட்டுமின்றி அவரை, வெண்டைக்காய், பீட்ரூட் போன்றவற்றின் விலைகளும் குளறுபடியாகவே இருக்கின்றன. இதுபோன்ற குளறுபடிகளைத் தவிா்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

துளிகள்...

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆா்.எம். புரிந்துணா்வு ஒப்பந்தம்

தாயை அவதூறாகப் பேசியதால் நண்பரை கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT