கோயம்புத்தூர்

நியாய விலைக் கடையை சேதப்படுத்திய காட்டு யானை

DIN

வால்பாறை அருகே நியாய விலைக் கடையை காட்டு யானை சேதப்படுத்தியது.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாள்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த ஸ்டேன்மோா் எஸ்டேட் பகுதிக்கு கடந்த வியாழக்கிழமை இரவு வந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த நியாய விலைக் கடையை சேதப்படுத்தியது. பின்னா் உள்ளிருந்த அரிசி மூட்டைகளையும் சேதப்படுத்தியது.

தொடா்ந்து, அதே பகுதியில் இருந்த இரண்டு குடியிருப்புகளைச் சேதப்படுத்திய யானை, அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தியது. இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT