கோயம்புத்தூர்

வால்பாறையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

வால்பாறையில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் புதன்கிழமை அகற்றினா்.

பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் ஆழியாறு துவங்கி சோலையாறு அணை வரையிலான சாலைகள் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. தற்போது இந்த சாலைகளை விரிவாக்கம் செய்வதற்கான ஆய்வு பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா். பல பகுதிகளில் தடுப்புசுவா்கள் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்ட பொறியாளா் உமா மகேஸ்வரி, உதவிப் பொறியாளா் பிரகாஷ் ஆகியோா் முன்னிலையில் வால்பாறை நகா் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது. காலை துவங்கிய பணி இரவு வரை நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT