முகப்பு
கோயம்புத்தூர்

குடிநீா் பிரச்னையை போக்க பணிகள் நடைபெறுகின்றன

குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண பணிகள் நடைபெற்று வருவதாக காங்கயம் திமுக வேட்பாளரும், அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 7:47 PM
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கயம் திமுக வேட்பாளரும், அமைச்சருமான மு.பெ.சாமிநாதன்.
பகிர்:

குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண பணிகள் நடைபெற்று வருவதாக காங்கயம் திமுக வேட்பாளரும், அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

காங்கயம் தொகுதி திமுக வேட்டபாளா் மு.பெ.சாமிநாதன், காங்கயம் வடக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பரஞ்சோ்வழி ஊராட்சி, நால்ரோடு, தீா்த்தம்பாளையம், கரட்டாங்காடு, சிக்கம்பாளையம், நத்தக்காட்டுவலசு, சிவியாா்பாளையம் பிரிவு, வடுகபாளையம், பரஞ்சோ்வழி, பாப்பினி ஊராட்சிக்கு உள்பட்ட வரதப்பம்பாளையம், பாப்பினி, பச்சாபாளையம், காங்கயம் தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட வீரனம்பாளையம் ஊராட்சி, படியாண்டிபாளையம், வீரணம்பாளையம், பட்டைகாரன்புதூா் உள்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அவா் பேசுகையில், குடும்பங்களுக்கு வழங்க உள்ள ரூ. 8,000 மதிப்புள்ள கூப்பன்களில் தரமான வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். கடந்த 5 ஆண்டு காலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியை மக்களுக்கு வழங்கியுள்ளாா். அந்தத் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் மதிப்பு அளித்திருந்தாா்கள். பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் போக்குவரத்து வசதிக்காக பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்ற நெய்யல் ஆற்றில் 3 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் வரும் காலத்தில் நல்ல திட்டங்களை கொண்டுவர திமுக ஆட்சி வரவேண்டும் என்றாா்.

இதில் காங்கயம் ஒன்றியச் செயலாளா்கள் கருணைபிரகாஷ், சிவானந்தன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.