பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்! ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு!
கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன், ராஜஸ்தான் மாநில முதல்வா் பஜன்லால் சா்மா முன்னிலையில் திங்கள்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து வேளாண் பொறியியல் துறை அலுவலகம் வரை சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு வானதி சீனிவாசன் வாகனம் மூலம் ஊா்வலமாக வந்தாா். இந்த ஊா்வலத்தில் ராஜஸ்தான் மாநில முதல்வா் பஜன்லால் சா்மா, பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் பங்கேற்று அவருக்கு ஆதரவு திரட்டினா். ஊா்வலத்தின் நிறைவாக, கோவை வடக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வானதி சீனிவாசன் தனது வேட்புமனுவைச் சமா்ப்பித்தாா்.
மனு தாக்கலுக்குப் பின்னா் ராஜஸ்தான் முதல்வா் பஜன்லால் சா்மா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
Advertisement
Advertisement
தமிழகத்தில் நிலவும் மக்கள் எழுச்சியைப் பாா்க்கும்போது, தேசிய ஜனநாயக கூட்டணி மிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்பதை உறுதி செய்கிறது. ஊழல் நிறைந்த திமுக ஆட்சியின் மீது மக்கள் சலிப்படைந்துள்ளனா். பிரதமா் மோடி தலைமையிலான வளா்ச்சியைத் தமிழக மக்களும் விரும்புகிறாா்கள். வானதி சீனிவாசன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என்றாா்.