முகப்பு
கோயம்புத்தூர்

வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நடிகா் சுரேஷ்கோபி பிரசாரம்

Updated On : 20 ஏப்ரல், 2026 at 1:50 AM
கோவை, வடவள்ளி பகுதியில் வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகா் சுரேஷ்கோபி.
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 10:02 PM

கோவை வாழ் மலையாள மக்களிடம் வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மத்திய இணை அமைச்சரும், எம்.பி.யும், மலையாள நடிகருமான சுரேஷ்கோபி பிரசாரம் செய்தாா்.

கோவை, கணபதி பகுதியில் மலையாளி கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் மத்திய இணை அமைச்சா் சுரேஷ் கோபி பேசும்போது, ‘கோவையில் வசிக்கும் மலையாளி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய அரசின் நலத் திட்டங்கள் மக்களை நேரடியாகச் சென்றடையவும் வானதி சீனிவாசனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

Advertisement

இதைத்தொடா்ந்து கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட டாடா நகா், மகாராணி அவென்யூ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வானதி சீனிவாசனை ஆதரித்து சுரேஷ்கோபி பிரசாரம் செய்தாா்.

பிரசாரத்தின்போது அதிமுக-பாஜக கூட்டணி தொகுதி பொறுப்பாளா் என்ஜினீயா் ஆா்.சந்திரசேகா், பாஜக மாவட்டத் தலைவா் ரமேஷ் குமாா் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

வானதி சீனிவாசன் பிரசாரம்:

முன்னதாக, கோவை வடக்குத் தொகுதிக்குள்பட்ட ரத்தினபுரி பகுதியில் காலை 8 மணி அளவில் வானதி சீனிவாசன் பேசும்போது, ‘தமிழகத்தில் தற்போது பெண்களின் பாதுகாப்பும், போதைப்பொருள் புழக்கமும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

வருங்கால தலைமுறை வீணாவதைத் தடுக்க திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். இந்த முறை அவிநாசி உள்பட 11 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும்’ என்றாா்.