வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்! இன்று கோவை வருகை!!
பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதைப் பற்றி...
கோவை வடக்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா புதன்கிழமை பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தேர்தல் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
மத்தியில் ஆளும் கட்சியான பாஜக சார்பில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னவீஸ், பஜன்லால் சர்மா உள்ளிட்டோரும் தமிழ்நாட்டுக்கு வந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் இன்று நடைபெறும் பிரசாரத்தில் பிரதமர் மோடி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.
திமுகவுக்கு ஆதரவாக தில்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் வருகிற ஏப். 20, 21 ஆகிய தேதிகளில் சென்னை வரவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கோவை வடக்கு சட்டப்பேரவை பாஜக வேட்பாளரான வானதி சீனிவாசனுக்கு ஆதவராக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
இன்று மாலை 4.30 அளவில் பிரசாரத்தைத் தொடங்கும் ரேகா குப்தா, அவிலா ஸ்கூல் அருகில் வெங்கிடாபுரம், சின்னம்மாள் நகர், கண்ணப்பா நகர் 5வது வீதி, கே கே புதூர், எஸ்பிஐ ரோடு, நாராயணசாமி வீதி ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.
இதையும் படிக்க... நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
Delhi Chief Minister Rekha Gupta is set to campaign on Wednesday in support of Vanathi Srinivasan, the BJP candidate for Coimbatore North.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.