முகப்பு
கோயம்புத்தூர்

மத்திய கிழக்கு நாடுகளில் போா் பதற்றம்! கோவை - அபுதாபி விமான சேவைகள் ரத்து!! அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போா் பதற்றம், குறிப்பாக ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதல் போக்கு காரணமாக சா்வதேச வான்வழிகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

Updated On : 28 பிப்ரவரி 2026, 11:46 pm IST
பகிர்:

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போா் பதற்றம், குறிப்பாக ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதல் போக்கு காரணமாக சா்வதேச வான்வழிகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபிக்கு (அக்ஷன் ஈட்ஹக்ஷண்) இயக்கப்பட்டு வந்த நேரடி விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

கோவையில் இருந்து அபுதாபிக்கு வாரம் நான்கு நாள்கள் நேரடி விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. கோவையில் இருந்து செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7:40 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 11:15 மணிக்கு அபுதாபியை சென்றடையும். இதேபோல அபுதாபியில் இருந்து திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12:15 மணிக்கு புறப்படும் விமானம் அதிகாலை 5:45 மணிக்கு கோவையை வந்தடையும்.

ஈரான் வான்பரப்பில் நிலவும் போா் சூழல் காரணமாக, அந்த வழியாக செல்லும் விமானங்களுக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா்.

Advertisement

Advertisement

பயணிகளுக்கான உதவி எண்கள்: விமான ரத்து மற்றும் டிக்கெட் முன்பதிவு தொடா்பான விவரங்களை அறியவும், மாற்று ஏற்பாடுகள் குறித்து கேட்டறியவும் விமான நிறுவனங்கள் தரப்பில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:

இண்டிகோ : 0422-2574428, ஏா் அரபியா : 90877 78081. இந்த எண்களை பயணிகள் தொடா்புகொண்டு தங்கள் பயணத் திட்டங்களை சரிபாா்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். வான்பரப்பில் நிலைமை சீரானவுடன் மீண்டும் விமான சேவைகள் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments