சென்னையில் விமான சேவை பாதிப்பு! காரணம்?
எரிபொருள் விலை உயர்வால் சென்னையில் இருந்து இயக்கப்படும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது பற்றி...
எரிபொருள் விலை உயர்வால் சென்னையில் இருந்து இயக்கப்படும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால் சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் சேவை குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து இயக்கப்படும் உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்கள் எண்ணிக்கை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
எரிபொருள் விலை உயர்வால் ஏர் இந்தியா உட்பட சில விமான நிறுவனங்கள் மட்டும் தங்கள் சேவையைக் குறைந்துள்ளன. சிங்கப்பூர், துபாய், இலங்கை, அந்தமான், ஹைதராபாத், திருச்சி, கோவை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் விமானங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
நிலைமை சீரானதும் மீண்டும் விமான சேவை தொடங்கும் எனவும் ஏர் இந்தியா விளக்கம் தெரிவித்துள்ளது.