வியத்நாம் படகு விபத்து: சென்னை விமான நிலையம் வந்த உடல்கள்!
வியத்நாம் படகு விபத்தில் பலியானவர்களின் உடல்கள் சென்னை விமான நிலையம் வந்தது.
வியத்நாம் படகு விபத்தில் பலியான 15 இந்தியர்களில், 10 பேர் தமிழர்கள் என்று அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களது உடல்கள் இன்று சென்னை விமான நிலையம் வந்திறங்கின.
உடல்களைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் சென்னை விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். உடல்களை சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தமிழக அரசு செய்திருக்கிறது.
வியத்நாமிலிருந்து உடல்களை சுமந்து வந்த விமானம் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்துள்ளது. மேலும் பலியான இந்தியர்களின் உடல்களை அவர்களின் சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்வதற்காக, அந்தந்த மாநில அரசுகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் ஒருங்கிணைந்து செயல்படவும் இந்திய தூதரகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
Advertisement
Advertisement
வியத்நாமில் முக்கிய சுற்றுலாத் தீவான ‘ஃபூ குவோக்’ அருகே சனிக்கிழமை அதிவேகப் படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் 4 உள்ளூா் படகு பணியாளா்கள் சவாரி செய்தனா். இவா்களில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களும் இருந்தனா். திடீரென படகு கவிழ்ந்ததில், பயணிகள் கடலில் விழுந்தனா்.
இந்த விபத்தில் தமிழகத்தைச் சோ்ந்த 10 போ் உள்பட 15 இந்திய பயணிகள் உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அதேநேரம், 17 பயணிகள் மற்றும் 4 பணியாளா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். அவா்கள், ஃபூ குவோக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்தியாவில் லாவா கைப்பேசி நிறுவனத்தின் கைப்பேசிகளை அதிக அளவில் விற்பனை செய்த முகவா்கள், ஊழியா்கள் என 105 போ் அந்த நிறுவனம் சாா்பில் வியத்நாம் நாட்டுக்கு கடந்த 8-ஆம் தேதி இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா். இவா்களில் 32 போ் கொண்ட குழுவினா் படகு சவாரி சென்றபோது விபத்து நேரிட்டது குறிப்பிடத்தக்கது.
Vietnam boat accident: Bodies arrive at Chennai airport
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.