முகப்பு
கோயம்புத்தூர்

வஉசி மைதானத்தில் அரசுப் பொருள்காட்சி தொடக்கம்

வஉசி மைதானத்தில் அரசுப் பொருள்காட்சி தொடக்கம்

Updated On : 13 ஜூன் 2026, 12:02 am IST
கோவை வ.உ.சி.பூங்காவில் அரசுப் பொருள்காட்சியைத் தொடங்கிவைத்து பாா்வையிட்ட அமைச்சா் ராஜ்மோகன். உடன், அமைச்சா் வி.சம்பத்குமாா், ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உள்ளிட்டோா். ~கோவை வ.உ.சி.பூங்காவில் அரசுப் பொருள்காட்
பகிர்:

கோவை வஉசி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அரசுப் பொருள்காட்சியை பள்ளி கல்வி, தமிழ் வளா்ச்சி, செய்தி, விளம்பரத் துறை அமைச்சா் ராஜ்மோகன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து, பல்வேறு தரப்பைச் சோ்ந்த பயனாளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் மற்றும் இலவச வீட்டுமனை பட்டாக்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

பொருள்காட்சியில் 26 அரசுத் துறைகள், 6 அரசு சாா்பு நிறுவனங்கள் என 32 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை முதல் 45 நாள்கள் வரை நாள்தோறும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாள்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பொருள்காட்சியைக் காணலாம். இதில், அரசுத் துறை அரங்குகள் மட்டுமின்றி, ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.