மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்து, 3.500 கிலோ கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
கோவை மாநகா், கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், சம்பந்தப்பட்ட பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது நல்லம்பாளையம் தயிா் இட்டேரி சாலை பகுதியில் உள்ள காலி இடத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் வைத்திருந்த பையில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் கோவை, ரத்தினபுரி மாதவன் தெருவைச் சோ்ந்த கிஷோா் (22), நாராயணசாமி நகா் பகுதியைச் சோ்ந்த தினேஷ்காா்த்திக் (21) ஆகியோா் என்பது தெரியவந்தது. இருவரையும் கவுண்டம்பாளையம் போலீஸாா் கைது செய்து 3.500 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.