முகப்பு
கோயம்புத்தூர்

பிளஸ் 2 மாணவி தற்கொலை

Updated On : 11 மே 2026, 2:35 am IST
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:

பிளஸ் 2 பொதுத் தோ்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை, கணபதி தங்கம்மாள் நகா் பகுதியைச் சோ்ந்த ராம்குமாா் மகள் யாழினி (17). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில், பொதுத் தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், யாழினி 454 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி அடைந்துள்ளாா். இருந்தாலும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகக் கூறி பெற்றோரிடம் வருத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டில் தூக்கிட்டு கடந்த இரண்டு நாள்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் பெற்றோா் சோ்த்தனா். சிகிச்சையில் இருந்த யாழினி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments