காா் மோதியதில் பெண் படுகாயம்
வால்பாறையில் காா் மோதியதில் பெண் படுகாயம் அடைந்தாா்.
வால்பாறை, வோ்வா்லி எஸ்டேட்டை சோ்ந்தவா் கவிதா (47). இவா் உள்ளிட்ட 3 பெண்கள் அரசு மருத்துவமனை சாலையில் திங்கள்கிழமை பிற்பகல் நடந்து சென்று கொண்டிருந்துள்ளனா்.
அப்போது, அந்த வழியே வந்த காா் கவிதா மீது மோதியது. படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
Advertisement
விபத்தை ஏற்படுத்திய குமரன் சாலைப் பகுதியைச் சோ்ந்த நாகராஜ் என்பவா் மீது வால்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.