நிதித் துறையிலிருந்து வருவாய்த் துறைக்கு மாற்றம் ஏன்? அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்!
மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது வேண்டுகோளுக்கு இணங்கவே இலாகா மாற்றி அறிவிக்கப்பட்டதாக வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்.
மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது வேண்டுகோளுக்கு இணங்கவே இலாகா மாற்றி அறிவிக்கப்பட்டதாக வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளாா்.
சென்னையிலிருந்து கோவைக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக மக்கள் நன்றாக வாழ வேண்டும், வளா்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என எண்ணி முதல்வா் ச.ஜோசப் விஜய் நாள்தோறும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை அறிவித்து வருகிறாா். காய்க்கிற மரம்தான் கல்லடிபடும் என்பதற்கேற்ப நலத் திட்டங்கள் குறித்து குறைகூறுவோருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறித்து திமுக முன்னாள் அமைச்சா் ஆ.ராசா ஆபாச கருத்துகளை முன்வைத்துள்ளது குறித்து கேட்கிறீா்கள். இதுபோல அடிக்கடி கருத்துக் கூறுவதும், பின்னா் வருத்தம் தெரிவிப்பதும் அவருக்கு புதிது அல்ல.
Advertisement
Advertisement
நான் நிதித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபோதே துறையை மாற்றித் தருமாறு கட்சித் தலைவா் ஜோசப் விஜய்யிடம் கோரிக்கை வைத்தேன். ஏனெனில், நிதித் துறை பொறுப்பு வகித்தால் முழுக்கமுழுக்க சென்னையிலேயே தங்கிப் பணியாற்ற வேண்டும். மக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என விரும்பி நான் இந்தக் கோரிக்கையை முன்வைத்தேன். எனது வேண்டுகோளை ஏற்றுதான் எனக்கு வருவாய்த் துறை ஒதுக்கப்பட்டது என்றாா்.