முகப்பு
கோயம்புத்தூர்

திருப்பூரில் பரவலாக மழை

திருப்பூரில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது.

Updated On : 24 மே 2026, 2:01 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

திருப்பூரில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது.

திருப்பூரில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை காலையும் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை சுமாா் 5 மணியளவில் நகரின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் பலத்த மழை பெய்தது.

Advertisement

Advertisement

மாநகரத்துக்குள்பட்ட ஆண்டிபாளையம், ஆலங்காடு, மத்திய பேருந்து நிலையம், வெடத்தலாங்காடு, புதிய பேருந்து நிலையம், மங்கலம் சாலை, பாரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதியடைந்தனா்.