ஈரோடு

வேளாண்மைத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்

DIN

பெருந்துறை வட்டாரம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் சார்பில், வேளாண்மைத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் காஞ்சிகோயில் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, வேளாண்மை உதவி இயக்குநர் ரங்கநாயகி தலைமை வகித்தார். துணை வேளாண்மை அலுவலர், தொழில்நுட்ப மேலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், வேளாண்மைத் துறை சார்ந்த திட்டங்கள் நிகழ்ச்சியில், ஆடல், பாடல் மூலம் பயிர் காப்பீட்டுத் திட்டம், கூட்டுப் பண்ணையத் திட்டம், மானாவாரி மேம்பாட்டுத் திட்டம், நுண்ணீர்ப் பாசனத் திட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக விவரிக்கப்பட்டது.
இதில், உதவி வேளாண்மை அலுவலர், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT