ஈரோடு

இந்திரா காந்தி பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு விழா

DIN

இந்திரா காந்தி பிறந்த நாள் நூற்றாண்டு விழா ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு விழா ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உள்ள ரவுண்டானா காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. 
 விழாவில், இந்திரா காந்தி உருவப் படத்துக்கு மாவட்ட சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் சுரேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் துணை மேயர் பாபு (எ) வெங்கடாசலம் இனிப்பு வழங்கினார்.
 விழாவுக்கு, மண்டலத் தலைவர் திருச்செல்வம் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர்கள் விவேகானந்தன், அம்புலி, ஜாபர்சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 இதில், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவாஜி கணேசன்,  சிறுபான்மைப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் கே.எம்.பாஷா  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT