தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் தெருநாய்கள் கடித்ததில் சாவு
அந்தியூர் அருகே தண்ணீர் குடிக்க வந்த புள்ளிமான், தெருநாய்கள் கடித்ததில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
அந்தியூர் அருகே தண்ணீர் குடிக்க வந்த புள்ளிமான், தெருநாய்கள் கடித்ததில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
அந்தியூரை அடுத்த சென்னம்பட்டி, சென்றாயனூர் பகுதியில் உள்ள குட்டையில் தண்ணீர் குடிக்க வனப் பகுதியிலிருந்து மான்கள் கூட்டமாக வந்துள்ளன. அப்போது, தெருநாய்கள் மான்களைத் துரத்தியுள்ளன. இதில், தனியே சிக்கிய மானை நாய்கள் துரத்தித் துரத்திக் கடித்தன. இதையடுத்து, நாய்களைத் துரத்திய அப்பகுதி மக்கள் வனத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். வெள்ளிதிருப்பூர் கால்நடை மருத்துவர் ரவிசந்திரன், வனத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்க்கையில் ஏற்கெனவே மான் உயிரிழந்ததும், ஒரு வயதான பெண் புள்ளிமான் என்பதும் தெரியவந்தது.