ஈரோடு

அறச்சலூரில் கொமதேக ஆலோசனைக் கூட்டம்

DIN

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அறச்சலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு, மாவட்ட தலைவர் வஜ்ரவேல் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் கனகராஜ், துணைச் செயலாளர் மனோகரன், பொருளாளர் வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட செயலாளர் பிரபாகரன் வரவேற்றார்.
 கூட்டத்தில், ஈரோடு கிழக்கு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம் மூன்று ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மொடக்குறிச்சி வடக்கு ஒன்றியத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் அர்ஜுனன், இணைச் செயலாளர் கார்த்தி, துணைச் செயலாளர் கார்த்திக், பொருளாளர் ஆனந்தன், மாணவரணி பொறுப்பாளர்கள் வெற்றி, விவேக், இளைஞரணி பொறுப்பாளர் அம்சகுமார் ஆகியோர் புதிய நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர். மேலும், உள்ளாட்சி, நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 
 இதில், மொடக்குறிச்சி தெற்கு ஒன்றியத் தலைவர் சண்முக வேலாயுதம், துணைத் தலைவர் சாமிநாதன், மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT