கொடுமுடியில் ரூ.4.60 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம்
கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வேளாண் விளைபொருள்கள் ஏலத்தில் ரூ.4.60 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வேளாண் விளைபொருள்கள் ஏலத்தில் ரூ.4.60 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
கொடுமுடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் 16, 751 தேங்காய்களை விற்பனைக்கு
கொண்டுவந்தனர்.
இதில் தேங்காய் அதிகபட்சமாக கிலோ ரூ. 33.37-க்கும் , குறைந்தபட்சமாக ரூ. 25.25-க்கும் ஏலம் போனது. 78 மூட்டைகளில் கொண்டு வந்த தேங்காய் பருப்பு ரூ. 2,91,170- க்கு விற்பனையானது.
இதில் முதல் தரம் அதிகபட்சமாக கிலோ ரூ.110.55-க்கும், குறைந்தபட்சமாக ரூ.106.99- க்கும், இரண்டாம் தரம் அதிகபட்சமாக ரூ.102.90-க்கும், குறைந்தபட்சமாக ரூ.78.05- க்கும் விற்பனையானது.
மொத்தமாக வேளாண் விளைபொருள்கள் ரூ. 4 லட்சத்து 60ஆயிரத்து 956 க்கு விற்பனையானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.