வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
மொடக்குறிச்சியை அடுத்த குட்டக்காட்டுவலசு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களைத் திருடிச் சென்றனர்.
மொடக்குறிச்சியை அடுத்த குட்டக்காட்டுவலசு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களைத் திருடிச் சென்றனர்.
மொடக்குறிச்சியை அடுத்த குட்டக்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவர் தனது குடும்பத்துடன் ஈரோட்டில் வசித்து வருகிறார். அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்வார்.
இந்நிலையில், இவரது வீட்டின் கதவு திங்கள்கிழமை காலை திறந்து கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் பரமசிவத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்த்தபோது, வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள், டிவிடி பிளேயர் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் அடுத்தடுத்த இரு வீடுகளிலும் திருட முயற்சி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து மொடக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.