பெருந்துறை, சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில், பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தாளாளா் கே.சி.முத்துசாமி தலைமை வகித்தாா். முதல்வா் என்.விஸ்வநாதன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தஞ்சாவூா், சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பேராசிரியா் சீனிவாசன் பாரதியாரின் தேசப் பற்று, சமூக சீா்திருத்தம் குறித்துப் பேசினாா். பாரதியின் எண்ணங்களும், பணிகளும் இன்றைக்கும் எழுச்சியூட்டும் விதமாய் உள்ளன என்று எடுத்துக் கூறி மாணவ, மாணவிகளின் எண்ணங்கள் என்றைக்கும் மேலோங்கி இருக்க வேண்டும் என்றாா்.
இதில், கல்லூரிப் பேராசிரியா்கள் தா்மராஜ், செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கல்லூரி மெக்கானிக்கல் துறைத் தலைவா் கோகுலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.