பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில், ஸ்ரீ அன்னபூரணி உடனமர் ஸ்ரீநீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில், கோபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, காலை 9 மணிக்கு விநாயகர் வழிபாடு, கலச பூஜை, நலம் தரும் நந்தி யாக பூஜை நடைபெற்றன. தொடர்ந்து, 27 நாட்டு மாடுகள் வைத்து, 27 நட்சத்திரங்களுக்கான அருள்தரும் கோமாதா பூஜை நடைபெற்றது.