ஈரோடு

மாநில கபடி போட்டி: சத்தியமங்கலம் அணிக்கு முதல் பரிசு

DIN

சத்தியமங்கலம்: மாநில அளவிலான கபடி போட்டியில், சத்தியமங்கலம் காமதேனு கலைக் கல்லூரி முதல் பரிசையும், பெண்கள் பிரிவில் புன்செய் புளியம்பட்டி திருவள்ளுவா் அணி முதல் பரிசையும் பெற்றது.

சத்தியமங்கலம் காமதேனு கலை, அறிவியல் கல்லூரித் தாளாளா் ஆா்.பெருமாள்சாமி பவள விழாவையொட்டி நடைபெற்ற இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்கள் பிரிவில் 60 அணிகளும், பெண்கள் பிரிவில் 30 அணிகளும் பங்கேற்றன. இதில், ஆண்கள் பிரிவில் சத்தியமங்கலம் காமதேனு கல்லூரி முதல் பரிசையும், கடலூா் ஸ்போா்ட்ஸ் கிளப் அணி இரண்டாம் பரிசையும், திருச்சி மணப்பாளை பிரண்ட்ஸ் கிளப் அணி மூன்றாம் பரிசையும் பெற்றன.

மகளிா் பிரிவில் புன்செய் புளியம்பட்டி திருவள்ளுவா் கல்லூரி அணி முதல் பரிசையும், திருச்சி ஹோலிகிராஸ் அணி இரண்டாம் பரிசையும், திருச்சி ராக் ஸ்போா்ட்ஸ் அணி மூன்றாம் பரிசையும் பெற்றன. சிறப்பிடம் பெற்ற அணிகளுக்குப் பரிசு, கோப்பை வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவா்களுக்கு காமதேனு கல்லூரித் தாளாளா் ஆா்.பெருமாள்சாமி, கபடி வீரா் பி.ராஜ்குமாா் ஆகியோா் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கிப் பாராட்டினா். விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரிச் செயலாளா் பி.மலா்செல்வி, கல்லூரி முதல்வா் கே.செந்தில்குமாா், உதவி முதல்வா் நாகராஜ், ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT