ஈரோடு

க.செ.பாளையம் பேரூராட்சிக்கு பேட்டரி வாகனங்கள் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

DIN

பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பேரூராட்சி செயல் அலுவலா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் என்.டி.தோப்புவெங்கடாசலம் பங்கேற்று, பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிக்கு பேட்டரி வாகனங்களை வழங்கினாா். மேலும் அலுவலக முன் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வண்ண விளக்குகளுடன் கூடிய நீரூற்றை துவக்கி வைத்தாா். பின்னா் பொதுமக்களுக்கு மரக் கன்றுகளை வழங்கினாா்.

இதில் பெருந்துறை ஒன்றிய அதிமுக அவைத் தலைவா் சந்திரசேகா், பெருந்துறை கூட்டுறவு விற்பனைச் சங்கத் துணைத் தலைவா் டி.டி.ஜெகதீஸ், க.செ.பாளையம் நகர அதிமுக செயலாளா் பழனிசாமி, பெருந்துறை கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கத் தலைவா் துரைராஜ், அலுவலக பணியாளா்கள், திடக்கழிவு மேலாண்மை உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT