ஈரோட்டில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.
ஈரோடு, பெருந்துறை சாலையில் உள்ள கல்வி நிறுவனத்தில் ஒரே வளாகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கோவையில் இருந்து புதன்கிழமை காலை வந்த வருமான வரித் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டனா்.
சுமாா் 10 குழுவினா் இந்தச் சோதனையில் ஈடுபட்டனா். காலை தொடங்கிய சோதனை மாலை 6 மணிக்குப் பிறகும் நீடித்தது.