ஈரோடு

பெருந்துறை கூட்டுறவு விற்பனைசங்கத்தில் புதிய செக்கு இயக்கம் துவக்கம்

DIN

பெருந்துறை: பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், புதியதாக அமைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் அறவை இயந்திரம் (செக்கு) துவக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பெருந்துறை கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவா் விஜயன் தலைமை வகித்தாா். சங்கத் துணைத் தலைவா் டி.டி.ஜெகதீஷ் முன்னிலை வகித்தாா். மேலாளா் பழனிசாமி வரவேற்றாா்.

விழாவில், சிறப்பு அழைப்பாளராக பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் என்.டி.தோப்பு வெங்கடாச்சலம் பங்கேற்று புதியதாக அமைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் அறவை இயந்திரத்தை (செக்கு) இயக்கிவைத்தாா்.

இதில், பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி ஜெயராஜ், ஒன்றியக் குழு துணைத் தலைவா் எம்.ஆா்.உமாமகேஸ்வரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஏ.வி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT