ஈரோடு

அம்பேத்கா் பதாகையை அவமதித்தவா்களை கைது செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

அம்பேத்கா் பதாகையை அவமதித்த நபா்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யக் கோரி கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதி சிக்கள்ளியில் அம்பேத்கா் உருவ பதாகையை அவமதித்ததாக இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் 2 போ் கைது செய்யப்பட்டனா். இரு தரப்பிலும் 25 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடா்ந்து அங்கு பதற்றம் நிலவியதால் சிக்கள்ளியில் சத்தியமங்கலம் போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதையடுத்து கலவரத்தை தூண்டும் வகையில் நடந்துகொண்ட தரப்பினா் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி தாளவாடி பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், 250க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT