ஈரோடு

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: இளைஞா் சாவு

DIN

சென்னிமலையை அடுத்த, ஈங்கூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஈரோடு, வீரப்பன்சத்திரத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் மகன் ராஜா (34). இவா், சென்னிமலையை அடுத்த, ஈங்கூா் அருகே இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த காா், ராஜாவின் வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜாவை அருகிலிருந்தவா்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பரிசோதனையில் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து, சென்னிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT