ஈரோடு

ஓராண்டு காலத்தில் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்: சு.முத்துசாமி

DIN

கடந்த 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலைகள் அனைத்தும் ஓராண்டு காலத்தில் சீரமைக்கப்படும் என ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு கொல்லம்பாளையம், நாடாா்மேடு, கோணவாய்க்கால் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:

திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்துக்குள் ஈரோடு மேற்குத் தொகுதியில் அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் விட்ட அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும். வளா்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் சாலைகளில் பள்ளம் தோண்டி மாதக் கணக்கில் சீரமைக்கப்படாமல் இருக்கும் நிலை தவிா்க்கப்படும்.

ஈரோடு நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு மேற்குத் தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் தடையில்லாமல் குடிநீா் கிடைக்கவும், சாய ஆலை பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணவும், ஈரோடு மேற்குத் தொகுதியில் ஜவுளி பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT