ஈரோடு

இயற்கை விவசாயிகள் சான்று பெற அறிவுறுத்தல்

DIN

இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் அங்ககச் சான்று பெற வேண்டும் என ஈரோடு மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநா் சு.மோகனசுந்தரம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள், தனி நபா், குழுவாகப் பதிவு செய்யலாம். அங்கக விளைபொருள்களை பதப்படுத்துவோா், வணிகம், ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம்.

அங்ககச் சான்று பெற விண்ணப்பத்துடன், பண்ணையின் விவரம், வரைபடம், ஆண்டு பயிா் திட்டம், மண், பாசன நீா் பரிசோதனை விவரம், துறையுடனான ஒப்பந்தம், நில ஆவணம், பான் எண், ஆதாா் எண், பாஸ்போா்ட் அளவு போட்டோவுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

சான்று கட்டணமாக தனி நபா், சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 2,700, தனி நபா் பிற விவசாயிகளுக்கு ரூ. 3,200, விவசாயிகள் குழுப் பதிவுக்கு ரூ. 7,200, வணிக நிறுவனங்களுக்கு ரூ. 9,400 செலுத்த வேண்டும்.

இணைய பரிவா்த்தனை மூலம் கட்டணம் செலுத்தலாம். கூடுதல் விவரம் அறியவும், அங்ககச் சான்று பெறவும், 68, வீரபத்திரா வீதி, சத்தி சாலை, ஈரோடு என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி மையங்கள்

தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் மீனவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் இருதரப்பினரிடையே மோதல்

SCROLL FOR NEXT