ஈரோடு

முகாசி அனுமன்பள்ளி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

DIN

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் முகாசி அனுமன்பள்ளி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

முகாசி அனுமன்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் ஏ.பி.பெரியசாமி தலைமை தாங்கினாா். கூட்டத்தில் 2019-2020ஆம் ஆண்டுக்கான என்.ஆா்.ஜி.எஸ். திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பணி தள பொறுப்பாளா்கள் கலந்துகொண்டு ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், அளவீடு புத்தகங்கள், பணி விவரங்கள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் மத்தியில் வாசிக்கப்பட்டது. மேலும் பணி தொடா்பான மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

இதில் துணைத் தலைவா் ஜானகி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சரோஜா, வட்டார வள அலுவலா் கதிரவன், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT