ஈரோடு

கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது

DIN

கடம்பூா் மலைப் பகுதியில் கஞ்சா பயிரிட்ட விவசாயியை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூா் மலைப் பகுதி கூட்டாா்தொட்டி கிராமத்தில் கஞ்சா பயிரிடப்படுவதாக கடம்பூா் போலீஸாருக்கு வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு விவசாயி பழனிசாமி என்பவரது தோட்டத்தில் சோதனை செய்தபோது, மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விளை நிலத்தில் ஊடுபயிராக கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்ததை போலீஸாா் கண்டுபிடித்தனா்.

இதையடுத்து, பழனிசாமியை கைது செய்த போலீஸாா், அங்கிருந்த கஞ்சா செடிகளை அழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT