சிவகிரியில் கைத்தறி நெசவாளா்கள் ஆா்ப்பாட்டம்
ஜவுளித் தொழிலை பாதுகாத்திடும் வகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகிரியில் ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஜவுளித் தொழிலை பாதுகாத்திடும் வகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகிரியில் ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நூல்விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், பருத்தியை அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் மீண்டும் சோ்க்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகிரி கிளையின் சாா்பில் கடைவீதியில் வெள்ளிக்கிழமை 6 மணியளவில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் முன்னாள் தலைவா் சண்முகம் தலைமை வகித்தாா். நெசவாளா் கூட்டுறவு சங்கத் தலைவா்கள் ராமசாமி, ரணதிவே, முன்னாள் இயக்குநா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், கைத்தறி நெசவாளா்கள், விசைத்தறியாளா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.