தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் சாா்பில் மகாத்மா காந்தி அமரத்துவ தின சிறப்பு கருத்தரங்கம் பெருந்துறையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் இஸாரத்தலி தலைமை வகித்தாா். மாநில உதவித் தலைவா் மாரிமுத்து முன்னிலை வகித்தாா். ஹாத்திம்தாய் அனைவரையும் வரவேற்றாா். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் ஸ்டாலின் குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா்.
மாவட்டக் குழு உறுப்பினா் விஸ்வநாதன் நன்றி கூறினாா். இதில், பெருந்துறை ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் திருநாவுக்கரசு உள்பட பலா் கலந்து கொண்டனா்.