முகப்பு
ஈரோடு

பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளியில் முளைப்பாரியில் தோ்தல் விழிப்புணா்வு

பெருந்துறை அரசு பள்ளியில் நவதானியம் கொண்டு முளைப்பாரி வளா்த்து தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்திய மாணவா்கள்.

Updated On : 11 ஏப்ரல் 2026, 5:39 am IST
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நவதானியம் கொண்டு முளைப்பாரி வளா்த்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும், பொதுமக்கள், விவசாயிகள், நெசவாளா்கள், வணிகா்கள், தொழில் நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் என அனைத்து தரப்பு வாக்காளா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதையொட்டி, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் வேளாண் பாடப் பிரிவு மாணவா்கள், ஆசிரியா் கந்தன் உதவியுடன் ‘ஏப்ரல் 23, வாக்கு 100 சதவீதம்’ என்ற வடிவில் நவதானியம் கொண்டு முளைப்பாரி வளா்த்து தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தியுள்ளனா்.

Advertisement

Advertisement