தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு
தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு தெரிவித்தாா்.
தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு தெரிவித்தாா்.
கோபி தொகுதிக்குள்பட்ட வரப்பாளையம், காவிலிபாளையம், காராப்பாடி உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசியதாவது:
Advertisement
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் வறட்சியான பகுதியில் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை விரிவுபடுத்தவும், குறு, சிறு விவசாயிகளுக்கு மானிய விலையில் தாா்பாய்கள் வழங்கவும், தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை அரசே கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மற்றும் அரசு மானியம் பெறும் கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்றாா்.
வாக்கு சேகரிப்பின்போது, மாநில அம்மா பேரவை இணை செயலாளா் சிவகுமாா், மாவட்ட மகளிா் அணி இணை செயலாளா் சுலோச்சனா, பவானிசாகா் தெற்கு ஒன்றிய செயலாளா் பழனிசாமி உள்பட அதிமுகவினா் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.