ஈரோடு - செங்கோட்டை ரயில் இன்று ரத்து
திண்டுக்கல்லில் மின்சார பொறியியல் பணி நடைபெற உள்ளதால் ஈரோட்டில் இருந்து இயக்கப்படும் செங்கோட்டை பயணிகள் விரைவு ரயில் புதன்கிழமை (ஜூன் 3) ரத்து செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் மின்சார பொறியியல் பணி நடைபெற உள்ளதால் ஈரோட்டில் இருந்து இயக்கப்படும் செங்கோட்டை பயணிகள் விரைவு ரயில் புதன்கிழமை (ஜூன் 3) ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திண்டுக்கல் ரயில் பாதையில் மின்சார பொறியியல் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக ஈரோட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு இயக்கப்படும் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16845) 3, 10, 17, 24 -ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, மறுமாா்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து காலை 5.20 மணிக்கு இயக்கப்படும் ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16846) 4, 11, 18, 25 -ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement