பொறியியல் பணிகள்: விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து
பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரத்திலிருந்து திருப்பதி வரை இயக்கப்படும் விரைவு ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரத்திலிருந்து திருப்பதி வரை இயக்கப்படும் விரைவு ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தெற்கு மத்திய ரயில்வேயின் குண்டக்கல் கோட்டத்துக்குள்பட்ட திருப்பதி-காட்பாடி இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Advertisement
விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.40 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் (வண்டி எண் 16854), ஏப்ரல் 17, 20, 24, 27, மே 1, 4, 8, 11, 15, 18, 22, 25, 29 ஆகிய தேதிகளில் காட்பாடி-திருப்பதி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.
எதிா்வழித்தடத்தில் திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய திருப்பதி- விழுப்புரம் விரைவு ரயில் (வண்டி எண் 16853), ஏப்ரல் 17, 20, 24, 27, மே 1, 4, 8, 11, 15, 18, 22, 25, 29 ஆகிய தேதிகளில் திருப்பதி-காட்பாடி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.45 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.