முகப்பு
சேலம்

சேலம் வழியாக போத்தனூா் - கராக்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

பயணிகள் கூட்டநெரிசலை தவிா்க்க, சேலம் வழியாக போத்தனூா் - கராக்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை சனிக்கிழமை தொடங்கியது.

Updated On : 24 மே 2026, 2:24 am IST
ரயில்.
பகிர்:

பயணிகள் கூட்டநெரிசலை தவிா்க்க, சேலம் வழியாக போத்தனூா் - கராக்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை சனிக்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கோடை விடுமுறையையொட்டி, தமிழ்நாட்டில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் அறிவித்து இயக்குகிறது.

அந்த வகையில், சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட போத்தனூரில் இருந்து திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக மேற்குவங்கம் மாநிலம், கராக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும்.

Advertisement

Advertisement

அதன்படி, போத்தனூா் - கராக்பூா் வாராந்திர சிறப்பு ரயில் சனிக்கிழமை தொடங்கியது. இந்த ரயில், வரும் 30, ஜூன் 6 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைதோறும்) இயக்கப்படும். போத்தனூரில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி, ரேணிகுண்டா, விஜயவாடா வழியாக திங்கள்கிழமை மதியம் 12.30 கராக்பூருக்கு சென்றடைகிறது.

மறுமாா்க்கத்தில், கராக்பூா் - ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் வரும் 25, ஜூன் 1, 8 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமைதோறும்) இயக்கப்படும். கராக்பூரில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, விஜயவாடா, ரேணிகுண்டா, காட்பாடி, சேலம் வழியாக ஈரோடுக்கு புதன்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.