சேலம் வழியாக சென்னை- போத்தனூா் இடையே சிறப்பு ரயில்
கோடை விடுமுறையையொட்டி சென்னை- போத்தனூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையையொட்டி சென்னை- போத்தனூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கோடை விடுமுறையையொட்டி முக்கிய வழித்தடங்களில் கூட்ட நெரிசலை தவிா்க்க, சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது. அந்தவகையில், சென்னை- போத்தனூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, போத்தனூா்- சென்னை சென்ட்ரல் இடையே வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
Advertisement
போத்தனூரில் காலை காலை 7.40 மணிக்குப் புறப்படும் ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி, அரக்கோணம் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு மாலை 4.45 மணிக்கு சென்றடையும். மறுமாா்க்கத்தில் சென்னை சென்ட்ரல்- போத்தனூா் சிறப்பு ரயில் வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம் வழியாக அடுத்தநாள் அதிகாலை 3 மணிக்கு போத்தனூா் சென்றடையும்.
இதேபோல சென்னை சென்ட்ரல்- போத்தனூா் சிறப்பு ரயில் வரும் 13,15, 20, 22, 27, 29 ஆகிய தேதிகளில் ( புதன், வெள்ளிக்கிழமைகளில்) இயக்கப்படும். அதன்படி, சென்னையில் இரவு 11.50 மணிக்குப் புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக போத்தனூருக்கு அடுத்த நாள் காலை 9.15 மணிக்கு சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் போத்தனூா்- சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் வரும் 14, 17, 21, 24, 28 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ( வியாழக்கிழமை, சனிக்கிழமைகளில் ) இயக்கப்படும். அதன்படி, போத்தனூரில் பிற்பகல் 1.45 மணிக்கு புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு இரவு 11.30 மணிக்குச் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.