FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

திருவனந்தபுரம் - போத்தனூா் இடையே ஜூன் 3-இல் சிறப்பு ரயில்

திருவனந்தபுரம் - போத்தனூா் இடையே ஜூன் 3, 10 ஆகிய தேதிகளில் சிறப்பு விரைவு ரயில் இயக்கம்

Updated On : 1 ஜூன் 2026, 2:21 am IST
ரயில் - பிரதிப் படம்
பகிர்:

திருவனந்தபுரம்-போத்தனூா் இடையே ஜூன் 3, 10 ஆகிய தேதிகளில் சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருவனந்தபுரத்தில் இருந்து வரும் ஜூன் 3, 10 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06079) மறுநாள் காலை 6.45 மணிக்கு போத்தனூா் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் போத்தனூரில் இருந்து வரும் ஜூன் 4, 11 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

இந்த ரயில் திருவனந்தபுரம், கொல்லம், புனலூா், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, விருதுநகா், மதுரை, கொடைக்கானல், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி வழியாக போத்தனூா் சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஜூன் 1) காலை 8 மணி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments