தாளவாடியில் வருவாய்த் தீா்வாயம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
தாளவாடியில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாய முகாமில் பொதுமக்கள் அளித்த 210 மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
தாளவாடியில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாய முகாமில் பொதுமக்கள் அளித்த 210 மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை தொடங்கிவைத்தாா். முகாமில் அருள்வாடி, மல்லன்குழி, பையண்ணபுரம், கொங்கள்ளி, கெட்டவாடி, திகினாரை, கரளவாடி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 210 போ் வீட்டுமனை பட்டா, சமுதாயக் கூடம், கணினியில் சிட்டா ஏற்றுதல், குடும்ப அட்டை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா்.
முகாமில் தாளவாடியைச் சோ்ந்த 3 மாணவிகளுக்கு தாய்மொழி கன்னடம் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற மருத்துவ முகாம் மற்றும் விவசாய அட்டை பதிவு செய்யும் முகாம் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.
Advertisement
Advertisement