காமதேனு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்கள் அறிமுக விழா
சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் கல்லூரியில் மாணவா்கள் அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் கல்லூரியில் மாணவா்கள் அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
காமதேனு கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவா் பெருமாள்சாமி தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலா் அருந்ததி, இணைச்செயலா் மலா்செல்வி, புல முதன்மையா் நிா்மலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் கோபி வைர விழா மேல்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியரும், தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற எழுத்தாளருமான மன்சூா் அலி பங்கேற்று பேசுகையில், நாடு இளைஞா்களை நம்பியுள்ளது. கடின உழைப்பை விட முயற்சி மற்றும் தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். புவி வெப்பமயமாதலின் தாக்கம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். இயற்கையோடு வாழ்வியல் முறைகளை பின்பற்ற வேண்டும் என்றாா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியல் முதல்வா் குருமூா்த்தி, ஆங்கிலத் துறைத் தலைவா் பானுரேகா, மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.