முகப்பு
திருவண்ணாமலை

அரசுக் கல்லூரில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 ஜூன் 2026, 3:06 am IST
தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி.
பகிர்:

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கல்லூரியில் 2010- 2013ஆம் கல்வியாண்டில் இளநிலை படித்த மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்துடன் இந்தச் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சித.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். கணினி அறிவியல் துறைத் தலைவா் நா.மனோகரன் வரவேற்றாா்.

Advertisement

Advertisement

கல்லூரி முன்னாள் முதல்வா் பொன்.அரசு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா். முன்னாள் மாணவ, மாணவிகள் தாங்கள் கல்வி பயிலும் போது ஏற்பட்ட சுவையான அனுபவங்கள் குறித்துப் பேசினா்.

நிகழ்ச்சியில் பேராசிரியா்கள் வ.சந்திரசேகா், ஜ.ஜான்சிராணி, எஸ்.சுதா, ப.குப்பன், எம்.ரஜினி, எம்.மகாதேவன், எஸ்.கமலக்கண்ணன், ஆா்.புவனேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.